Friday 27 November 2009

இலங்கை மீனவர்களை காப்பாற்றிய தமிழக மீனவர்கள்

ராமேசுவரம் அருகே உள்ள பிசாசு முனை கடல் பகுதியில், பிளாஸ்டிக் படகில்
இலங்கை மீனவர்கள் 2 பேர், கடல் கொந்தளிப்பால் தத்தளித்தனர். அவர்களை அந்த
பகுதியில் மீன் பிடிக்க சென்ற ராமேசுவரத்தை சேர்ந்த நாட்டு படகு
மீனவர்கள் காப்பாற்றினார்கள். அவர்களுக்கு தங்கள் படகில் வைத்திருந்த
உணவையும் கொடுத்து, ராமேசுவரத்துக்கு படகுடன் கொண்டு வந்தனர்.

பின்னர் இலங்கை மீனவர்கள், இந்திய கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையில் அவர்களது பெயர்கள் மரியன் பிரதீப் (வயது29), ஆல்பர்ட் சலீமா
(31) என்று தெரிய வந்தது. அவர்கள் இலங்கையில் உள்ள பேசாலை என்ற இடத்தை
சேர்ந்தவர்கள். கடலில் எரிபொருள் தீர்ந்து விட்டதால், கடல் கொந்தளிப்பில்
சிக்கி 3 நாட்களாக நடுக்கடலில் தவித்ததாக, இலங்கை மீனவர்கள்
தெரிவித்தனர். பின்னர் இலங்கை மீனவர்கள் 2 பேரும், ராமேசுவரம் போலீஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20514

============

இதைப் பார்த்தாவது ஒவ்வொரு சிங்களவனும், புத்த பிக்குகளும், சிங்கள
கொலைக்கார ராணுவத்தினரும், முதுகெலும்பே இல்லாத இந்திய அதிகார
வர்க்கத்தினரும், உலக பதறுகளும் வெட்கித்தலைகுனியவேண்டும்...

முத்தமிழ்வேந்தன்
சென்னை

No comments:

Post a Comment