Saturday 28 November 2009

நாணத்தான் போகிறாய் புத்தா..!

நாணத்தான் போகிறாய் புத்தா..!

அலை அலையாய் தமிழ்க் கூட்டம்

நகர்ந்தது காண்...

எரிமழையாய் ஏவுகணை ஆயுதங்கள்

இடைவிடாமல் தமிழ்ச் சிதைவே

நோக்கமென்று...

ஈழத்தில் இறங்கியது!

சிறுகுழந்தை தாய்மார்கள்

ஈழத்துக் குருவிக் கூட்டம்-

அத்தனையும் ரத்தச் சேற்றில்

ரணப்பட்டு துடித்ததய்யா!

அப்பொழுது...

'பொழுதெல்லாம் அழிவு தரும்

போரென்ற பேரவலம்

தலையிடுங்கள், தடுத்திடுங்கள்'- என

ஈழத்தில் சாக்குரல்

இங்கேயும் கூக்குரல்!

இறுமாப்பு செவிகளுடன்

'தூதர் இதோ போகிறார்

இப்போது போகிறார்' என

தமிழன் வாழ்வில் மண்ணள்ளிப்போட்டு-

மன்மோகன் வாய் மொழிந்தார்.

ஆனால் இப்பொழுது?

தமிழனை அழித்த

சிங்களச் சாத்தான்கள்

தங்களுக்குள் தாக்கிக் கொள்ள... ஐயகோ பொறுக்கவில்லை

காந்தி தேச

கசாப்பு ஆட்சி மனம்!

தமிழனின் உயிர்வலியை

தாங்கவொண்ணா வலிமொழியை

திமிர்விழியால் ரசித்த டெல்லி...

சிங்களனின் கூட்டுக்குள்ளே

சிறு உரசல் என்றவுடன்

பதறித் துடிக்குது பார்...- கொழும்புப்

பயணம் போனது பார்!

புலி வெளியே வருமென்று- உலகம்

காத்திருக்கும் வேளையிலே

தமிழன் மேல் போர்த் தொடுத்த

இந்திய பூனைக்குட்டி

இன்று வெளிவந்ததடா!

கண்டியிடம் பல் துறந்த

பொக்கை வாய் புத்தா!

காலத்தின் பற்களினால்

கயவர்கள் கடிபடுவர்...

காணத்தான் போகிறாய்- கண்மூடி

நாணத்தான் போகிறாய்!


தமிழக அரசியல் வார இதழிலிருந்து

1 comment: