Friday 22 May 2009

பிரபாகரன் மனைவி, மகள் மரணம் அடையவில்லை; பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம்: இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கை தடுமாறுகிறது, இதன் முகத்திரை கிழிகிறது, இதற்கு கொடி பிடித்த அம்பிமார்கள், துரோகிகள், சிங்கள காடைகளும் மிகுந்த சோகத்தில் மூழ்குகின்றனர், விரைவிலே இவர்களின் அண்ணன் மகிந்த, கோத்த போர்குற்றவாளி கூண்டில் ஏற அமெரிக்கா அனைத்து ஆரம்ப வேலைகளையும் நிறைவு செய்துள்ளது..

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, 2-வது மகன் பாலச்சந்திரன் ஆகிய மூவரும் இங்கிலாந்தில் பாதுகாப்புடன் உள்ளனர். ஆனால் இவர்கள் மூவரும் போரில் கொல்லப்பட்டு விட்டதாக அதிகார பூர்வமற்ற ஒரு தகவல் கடந்த புதன்கிழமை வெளியானது.

பிரபாகரன் உடல் கிடந்த நந்திக்கடல் கழிமுக பகுதியில் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகிய 3 பேரின் உடல்களை மீட்டதாக இராணுவத்தின் 56-வது படையணி கூறியது.

பிரபாகரன் உடல் கிடந்த இடத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவில் அந்த உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது சிங்கள இராணுவத்தின் ஏமாற்று வேலை என்று உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

பிரபாகரன் உடல் கிடந்ததாக கூறப்படும் நந்திக்கடல் பகுதியில் பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் திரண்டிருந்தனர். அவர்களுக்கு எப்படி மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் உடல்கள் அன்றைய தினம் கிடைக்காமல் போனது என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து பிரபாகரன் மனைவி குறித்து வெளியிடப்பட்ட தகவல் தவறானது என்று சிங்கள இராணுவம் ஒத்துக்கொண்டது.

இது தொடர்பாக சிங்கள இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரா கொழும்பில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரன் மரணம் அடைந்து விட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர்களது உடல்கள் எதையும் இராணுவம் மீட்கவில்லை.

இராணுவத்திடம் 4 ஆயிரம் விடுதலைப்புலிகள் சரண் அடைந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

நடேசன், புலித்தேவன் இருவரும் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த போது சுட்டுக் கொல்லப்படவில்லை. இராணுவத்துடன் சண்டையிட்ட அவர்கள் இறந்தனர்.

கடைசி நாள் போரில் இராணுவமும் பலத்த உயிரிழப்பை சந்தித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். எத்தனை ஆயிரம் சிங்கள வீரர்கள் பலியானார்கள் என்று கேட்டதற்கு உதய நாணயகாரா பதில் அளிக்க மறுத்து விட்டார்.

சிங்கள இராணுவத்துக்கு 40 ஆயிரம் வீரர்கள் தேவை என்று அரசு சார்பில் கடந்த 2 நாட்களாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதை வைத்து பார்க்கும் போது, முல்லைத்தீவு சண்டையில் பல்லாயிரக்கணக்கில் வீரர்களை சிங்கள இராணுவம் இழந்திருக்கும் என்று கருதப்படுகிறது.



முல்லைத்தீவு நந்திக் கடல் பகுதியில் பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம்: சிங்கள இராணுவம் சொல்கிறது

இலங்கை முல்லைத்தீவில் உள்ள நந்திக் கடல் பகுதியில் நடந்த சண்டையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்று விட்டதாக இராணுவம் அறிவித்தது.

பிரபாகரன் உடலை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு துரோகம் செய்து, அமைச்சர் பதவி பெற்றுள்ள கருணாவை அழைத்து வந்து அடையாளம் காண வைத்தனர்.

கருணாவும் அந்த உடலை பார்த்து விட்டு இது பிரபாகரன் உடல்தான் என்றார்.

ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக விடுதலைப்புலிகள் உறுதியுடன் தகவல் வெளியிட்டனர். பிரபாகரன் எப்படி தப்பிச்சென்றார் என்ற முழு விபரமும் நேற்று வெளியானது. இதனால் பிரபாகரன் தொடர்பாக மர்மம் நீடிக்கிறது.

இந்த நிலையில் பிரபாகரன் உடலை எரித்து விட்டோம் என்று சிங்கள இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நந்திக் கடல் கழிமுகப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரபாகரன் உடலை இராணுவம் கைப்பற்றியது. அந்த உடம்பில் இருந்து பரிசோதனைக்காக இரத்தம் எடுத்துள்ளோம். இது பிரபாகரன் உடல்தான் என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இனி பிரபாகரன் உடல் தொடர்பாக எந்த டி.என்.ஏ. சோதனையும் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம். அவரது உடல் மீட்கப்பட்ட நந்திக்கடல் பகுதியிலேயே இந்த தகனம் புதன்கிழமை நடந்தது.

பிரபாகரன் உடலுடன் அவரது சகாக்களின் உடல்களும் முழுமையாக எரிக்கப்பட்டு விட்டது. ஆனால் பிரபாகரனும் அவரது சகாக்களும் தப்பிச் சென்று விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள்.

பிரபாகரன் உடலை எங்கள் டி.வி.குழுவினர் படம் பிடித்துள்ளனர். கருணாவும், தயா மாஸ்டரும் உறுதி செய்துள்ளனர். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

இவ்வாறு பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார்.

Wednesday 20 May 2009

சாட்சியில்லா யுத்தத்தில் கொல்லப்பட்ட பல ஆயிரக்கண மக்களின் உடல்களை தடையமின்றி அழிக்கும் முயற்சிகள் ஆரம்பம்? உடன் விரைந்து செயற்பட வேண்டுகோள்

வன்னியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயம் அடைந்தும் உள்ளனர்.

குறிப்பாக கடந்த இறுதுக் கட்ட நாட்களில் தொடர்ந்த மோதலின் இடையே சிக்கியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் குறித்து தெளிவான தகவல்கள் எவையும் இல்லை.

இறுதியாக முள்ளிவாய்க்கால் பகுதி கைப்பற்றப்பட்ட போது குறைந்தது 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என அங்கிருந்து எஞ்சியிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அங்கு இருந்த மக்கள் பற்றியோ அல்லது கொல்லப்பட்ட காணாமல் போன காயம் அடைந்த படையினரால் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்கள் குறித்தோ உடனடியான கவனம் செலுத்தப்பட வேண்டும் என அங்கிருந்து வெளியேறிய பலரும் தொடர்ச்சியான வேண்டுகோள்களை விடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்த சாட்சியற்ற கொடிய யுத்தத்தில் கொல்லப்பட்ட இன்னும் கொலை செய்யப்பட உள்ள மக்களின் சடலங்களை அடையாளம் காணமுடியாது அழிப்பதற்கான துரித நடவடிக்கைகள் தற்போது படையினரால் செயற்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் வன்னியில் இருந்து வெளியேறியவர்கள் எஞ்சியிருப்பவர்கள் காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள், கொல்லப்பட்டவர்கள் இன்னும் படையினரால் இரகசியமாகக் தடுத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் என அனைவரையும் கணக்கெடுக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க சர்வதேச அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் உடனடியாகவே சுயாதின அமைப்புகுக்கள் மனித உரிமை அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள் இந்தப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இறுதியாக முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து வெளியேறிய அரசாங்க அதிகாரிகள், மற்றும் வைத்தியர்கள் ஆகியோர் விடுவிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து உண்மைத் தகவல்களை மனித உரிமைகள் அமைப்புக்கள் சுயாதீன அமைப்புக்கள் பெற்றுக் கொள்ள வளியேற்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

Tuesday 19 May 2009

வருண் என்னும் சிங்கள காடையனை அடித்து துரத்துங்கள்

இவனுக்கு எதுவும் எழுதி என்னுடைய பொழுதை வீணடிக்க விரும்பவில்லை, நீங்களே பின்னூட்ட்டத்தில் இந்த நாயை ஒரு பிடி பிடியுங்கள்.

வெத்து வேட்டு, பீளிச்சிங் பவுடர் போன்ற சிங்கள காடைகளும் இங்கே உலா வருகின்றன. கவனம்.

Monday 18 May 2009

ராசபக்சேக்கு தூக்கு தண்டனை கிடைக்குமா?

விரைவிலே பக்சே சகோதரர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார்கள். இதற்கான ஆயத்த வேலைகளில் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இறங்கியுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25000க்கும் அதிகமான தமிழர்களை கொன்று இனவெறியினை தீர்த்து கொண்ட இவரின் கதி இனி அதோ கதிதான்.

Sunday 17 May 2009

ஒரு சில விசமிகள் தேவையற்ற அவதூறான பரப்புரை

அன்பான தமிழிழ மக்களே! விசமிகளின் பொய்ப் பரப்புரையை நம்பவேண்டாம்.

ஒரு சில விசமிகள் தேவையற்ற அவதூறான பரப்புரையில் கிளம்பியுள்ளனர். தமிழ் மக்களுக்குக் காலங்காலமாக துரோகம் செய்து வருகின்ற ஒரு சில ஒட்டுப்படைக்கும்பல்கள் அரசுடன் இணைந்து கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் உடலை கைப்பற்றியிருப்பதாகவும் அவரது உடலம் கொழும்பிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பல பொய்யான தகவல்களை ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்திய அரசிற்குச் சார்பான ஒரு சில ஊடகங்கள் இச்செய்தியை மிகைப்படுத்தி எழுதுவதாக அங்கிருந்து கிடைத்த தகவல்களும் தெரிவிக்கின்றன. ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள் இன்னும் போர்ப்பிரதேசங்களில் உள்ளனர். அவர்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதே சிங்கள அரசின் திட்டம். வன்னித் தகவல்களின் படி இதுவரை 25000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பல்லாயிரக் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தொடர்ந்தும் கடும் சமர் நடந்து வருவதாகவும் தெரியவருகின்றது.

மேலும் இலங்கைத் தமிழர் பாதுகதப்பு இயக்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டள்ளதாவது:

மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவலத்தை மறைப்பதற்காகவே இலங்கை இனவெறி அரசு இப்படியான பொய்யான செய்திகளைப் பரப்பிவருகின்றது. இப்படியான பொய்ப் பரப்புரைகளை தயவுசெய்து யாரும் நம்பவேண்டாம். மக்களைக்காப்பாற்ற தலைவரின் நேரடி வழிகாட்டலின் கீழ் அனைத்து முன்னணித் தளபதிகளும் களத்தில் நின்று முனைப்புடன் போராடி வருகின்றனர்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவலத்தை மறைப்பதற்காகவே இலங்கை இனவெறி அரசு இப்படியான பொய்யான செய்திகளைப் பரப்பிவருகின்றது. இப்படியான பொய்ப் பரப்புரைகளை தயவுசெய்து யாரும் நம்பவேண்டாம். மக்களைக்காப்பாற்ற தலைவரின் நேரடி வழிகாட்டலின் கீழ் அனைத்து முன்னணித் தளபதிகளும் களத்தில் நின்று முனைப்புடன் போராடி வருகின்றனர்.
சாவின் விளிம்பில் நிற்கும் மக்களைக் காப்பாற்ற இந்தக் கட்டத்திலாவது அனைத்துலகமும் ஐநாவும் முன்வர வேண்டும் என அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.

http://www.tamilseythi.com/tamileelam/parappurai_170509.html

Saturday 16 May 2009

ஏன்? இதற்கு முன்னர் 40 சீட் எடுத்தவர்கள் 12 தொகுதிகளில் மண்ணை கவ்வியது

தமிழக மக்களின் அன்பு, பாசம் என்றும் ஈழத்தமிழர்களுக்கு உண்டு. இந்த தேர்தல் தோல்வி முழுக்காரணம் தமிழ் மக்களின் அதிருப்தி ஓட்டுகள் அனைத்தும் பிரிந்தே விழுந்துள்ளன அதிமுகவிற்கும், தேமுதிக மற்றும் பாஜக. இதற்கு முன்னர் 40 சீட் எடுத்தவர்கள் 12 தொகுதிகளில் மண்ணை கவ்வியது, இழந்தத்து, மேலும் மத்திய அமைச்சர்களே மண்ணை கவ்வியது அனைத்தும் இதற்கு சான்றுகள்.

மேலும் அதிகாரம், பணம், போலீஸ், ரௌடியிசம் போன்றவற்றின் கூட்டு சர்வாதிகாரத்திற்கு கிடைத்த வெற்றியே இது.

பொய்யான வெற்றியே விட, உண்மையான தோல்வி சிறந்தது.

Thursday 14 May 2009

மகனுக்காக தந்தை இடமாற்றம், மாநிலத்தில் முதலாவதாக வந்தார்

வாழ்த்துகள் ரமேஷ், இப்படி ஒரு தந்தை கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்த தேர்ச்சி விகிதம் 83 சதவீதமாகும். ‌திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, இலஞ்சியை சேர்ந்த மாணவர் ரமேஷ் தமிழை முதல் பாடமாக கொண்டு தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார். குளறுபடி இல்லாத தேர்வு, எளிதான வினாத்தாள்கள், பதட்டம் இல்லாமல் தேர்வெழுதுவதற்காக கூடுதலாக 15 நிமிடம் வழங்கியது போன்ற காரணங்களால் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொத்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 1.4 % குறைந்துள்ளது .


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆறரை லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துவந்த தேர்வு முடிவு, இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் சேர்வதற்கு, பிளஸ் 2 முக்கிய பாடங்களில் அதிக மதிப்பெண் பெற வேண்டிய கட்டாயம் இருப்பதால், மாணவர்களும், பெற்றோர்களும் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.


முதலிடம் பிடித்த மாணவர் ரமேஷ் பேட்டி : பொழுதுபோக்கு விஷயங்களை ஒதுக்கிவைத்து விட்டு படித்ததால் மாநில முதலிடம் பெற முடிந்தது என இலஞ்சி மாணவர் ரமேஷ் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். அங்குள்ள சர்வோதய சங்கத்தில் மேலாளராக பணிபுரிகிறார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவரது மகன் ரமேஷ், பிளஸ் 2 தேர்வில் 1183 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தில் தேறியுள்ளார். குற்றாலம் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் படித்த இவர் தமிழில் 195, ஆங்கிலத்தில் 189, இயற்பியல், உயிரியல், கணிதம் ஆகியவற்றில் 200 மதிப்பெண்களும் வேதியியலில் 199 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இவர் பத்தாம் வகுப்பு தேர்விலும் மாவட்ட அளவில் இரண்டாம் இடம்பெற்றுள்ளார். தமது வெற்றி குறித்து மாணவர் கூறுகையில், சுமாரானதுதான் எங்கள் குடும்பம். அம்மா ஜெயலட்சுமி இல்லத்தரசி. எனது மூத்த சகோதரிகள் செண்பகாதேவி பி.இ.,படிப்பும், மகேஸ்வரி ஆசிரியை பயிற்சியும் படித்துள்ளனர். எங்கள் பள்ளி முதல்வர் காந்திமதி, தாளாளர் மோகனகிருஷ்ணன், ஆசிரியர்களின் ஊக்கம்தான் இத்தகைய வெற்றிக்கு காரணம். நான் பிளஸ் 2வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது என் பெற்றோரின் கனவு. என்படிப்பிற்காக புளியங்குடியில் இருந்து குடிபெயர்ந்து குற்றாலம் மேலகரத்தில் வாடகை வீட்டில் குடியேறினோம்.என் தந்தைதான் தினமும் வேலைக்கு புளியங்குடிசென்றுவந்தார். எனக்காக என் தந்தை சிரமப்படுவதை பார்த்து பெற்றோரின் கனவான மாநில ரேங்க் பெற வேண்டும் என ஆசைப்பட்டு படித்தேன்.


எனக்கு பயாலஜிதான் சிரமமாக இருந்தது. எனவே அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து தினமும் அதிகாலையில் எழுந்து படிப்பேன். எங்கள் வகுப்பில் அன்றைய பாடங்களை அன்றே தெளிவாக புரிந்துகொண்டுபடித்துவிடுவோம். அடிக்கடி தேர்வுகள் எழுதுவோம். இரவு அதிகபட்சம் 10.30 மணிவரைதான் படிப்பேன். படிப்பிற்காக டியூசன் செல்லவில்லை. வீட்டில் டிவியோ கேபிள்டிவி கனெக்சனோ கிடையாது. புத்தகம் வாசிப்பதிலும், கீபோர்டு இசைப்பதிலும் ஆர்வம் உண்டு. இருப்பினும் படிப்பிற்காக அவற்றையும் ஒதுக்கிவைத்திருந்தேன். டாக்டராக ஆசை. குறிப்பாக "ஸ்டெம்செல்' எனப்படும் மருத்துவ துறையில் உயர்கல்வி பயில ஆர்வமாக உள்ளேன். சென்னை மருத்துவகல்லூரியில் சேர்ந்து பயில்வேன் என்றார்.

Wednesday 13 May 2009

மீண்டும் குழம்பி போன சசிக்கு அனானியின் நறுக்

உங்களது முந்தைய பதிவுக்கே பதில் எழுதியாக வேண்டும் எனத் தோன்றியது. ஆனாலும் அதில் பலனிருக்குமா, புரிந்து கொள்வீர்களா என்பது சந்தேகமாக இருந்ததால் எழுதவில்லை.

தற்போது வன்னியிலுள்ள சூழல் ஒப்பிட முடியாததாயினும், வன்னியில் வாழ்ந்து, குண்டு மழைகளிலிருந்து தப்பி வந்தவர்களில் நானும் ஒருவர். இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் எல்லாவற்றையும் அனுபவித்த உரிமையில் இதை எழுதத் தோன்றியது.

எத்தனையோ சிங்கள நண்பர்களும் இருந்தனர் (இருக்கிறார்கள் என்று சொல்ல தற்போதைய மனநிலை இடம் கொடுக்கவில்லை). எத்தனையோ நல்ல மனம் படைத்த அந்த சிங்கள நண்பர்களே, தற்போது கொல்லப்படும் அப்பாவித் தமிழர்கள்பற்றிய எந்த கவலையும் இல்லாமல், போர் அவசியமானதுதான் என்று சொல்லும்போது எல்லாமே வெறுத்துப் போகின்றது. இனிமேல் அவர்களுடன் சேர்ந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்ற எண்ணத்தை கொடுக்கிறது. அரசியல்ரீதியாக நேரடியாக இலங்கை அரசாங்கத்திடம் கேட்டு, அவர்கள் எதையும் தூக்கிக் கொடுக்கப் போவதுமில்லை.

'போதுமடா போராட்டம் என்கின்றீர்கள்', இது போராடும் எண்ணம் உள்ளவர்களையும் சோர்ந்து போகச் செய்யும். அதன் விழைவு 'இலங்கையில் தமிழினம் என்று ஒன்று இருந்தது' என்று வரலாறில் மட்டுமே படிக்க வேண்டிய நிலமைதான் வரும். அப்படி வரலாற்றில் பதிவு செய்ய சிங்களவர்கள் அனுமதிப்பார்களா என்பதே தெரியாது. ஏற்கனவே வரலாற்றை மாற்றி வைத்திருக்கிறார்கள்.

உயிர் வாழ்ந்தால் மட்டும் போதும், அடிமையாகவே இருந்து விடலாம் என்று எண்ணினாலோ, அல்லது ஈழம் என்ற பெயரே அழிந்து ஒழிந்து விடலாம் என்று எண்ணினாலோ மட்டுமே, ஈழப் போராட்டாம் வேண்டாம் என்ற முடிவுக்கு வரலாம்.

ஏனென்றால், உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களையும் இப்படி எழ்த்துக்கள் சோர்வடையச் செய்து விடலாம். அதனாலே சொல்கின்றேன்.

வன்னியை விட்டு வெளியேறியவர்கள், வெளியேற்றப்ப்பட்டவர்கள், தற்போது எப்படி வாழ்க்கை வாழ்கின்றார்கள்? பொலநறுவையிலிருந்து வந்திருந்த படங்கள் பார்த்த அதிர்ச்சியே இன்னும் தீரவில்லை. உண்மையைச் சொன்னால் அழக்கூட முடியவில்லை. கண்ணீர் வற்றி விட்டது. நீங்களும் அந்தப் படத்தை பார்த்திருக்கக்கூடும். வன்னி மக்களிடம் கேட்க வேண்டும் என்றால், அவர்களுக்கு அடுத்த பக்கத்திலுள்ள பயங்கரம் புரியாமலும் இருக்கலாம். எங்கேயும் இருக்க முடியாமல் தவிக்கும் மக்களை நினைத்தால்.....

ஏதோ உங்களுக்கு தெளிவான ஒரு பின்னூட்டம் எழுதும் எண்ணத்தில்தான் எழுத ஆரம்பித்தேன். ஆனால் எண்ணங்கள் முட்டி மோதி, உடைந்து சிதறிப் போகின்றது.

ஒன்றே ஒன்று உங்களிடம் சொல்ல வேண்டும். பலரையும் சென்றடையும் கருத்துக்களை எழுதிவரும் நீங்களெல்லாம், இப்படி தயவு செய்து, ஏற்கனவே சூழ்நிலையால் சோர்ந்திருப்பவர்களை, மேலும் சோர்வடையச் செய்து விடாதீர்கள்.


/*

இப்போது இவரது பின்னூட்டங்களில் முண்ணனி வகிப்பது சிங்கள் காடைகளும், குடுமிகளுமே ஒரு மடையன் குடுமி சீமானையே பத்தி கேவலமாக பேசியது, வெத்து வேட்டு என்ற சிங்கள காடை தமிழின துரோக வேலைகளை பலகாலமாக செய்து வருகிறது, இவர்கள் எல்லாம் இப்போது சசியின் நண்பர்கள்.
*/

Tuesday 12 May 2009

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான பெரியார் தி.க.வின் குறுவட்டுக்களை ஒளிபரப்ப நீதிமன்றம் அனுமதி

கருணாநிதியின் பித்தலாட்டம் இப்போது கோர்ட் மூலம் வெளிப்படுகிறது, சீமானை பிடிச்சி, சிடியை பிடிச்சி என்ன நடந்தது. இல்ல மின் தடை யாரும் சிடியை பார்க்க கூடாதாம். ஒரு சீட் கூட இந்த கொலைகார கூட்டணிக்கு கிடைக்க போவதில்லை.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக பெரியார் திராவிடர் கழகம் தயாரித்துள்ள குறுவட்டுக்களை ஒளிபரப்ப உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை குறித்தும் அதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் துணை போவதை விளக்கியும் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் குறுவட்டு ஒன்று தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த குறுவட்டை வெளியிடக்கூடாது என்று காவல்துறையினர் தடை விதித்தனர்.

இதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சி.பி.செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சோதிமணி, சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, குறுவட்டுக்களை தயாரிக்கும்போது, அதில் அதை தயாரித்தவர் மற்றும் வெளியிடுவோரின் பெயர் இடம்பெற வேண்டும்.
அவ்வாறு இருந்தால் அதை வெளியிட எந்தத் தடையும் இல்லை. எனவே இலங்கை இனப்பிரச்சினை குறித்த குறுவட்டை வெளியிட அனுமதியளிக்க வேண்டும் என்று செந்தில்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குறுவட்டை வெளியிட அனுமதியளித்தனர். இந்த தீர்ப்பை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள்
வரவேற்றிருக்கின்றனர்.

இதேவேளையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு 9:00 மணிக்கு பின்னர் திடீரென மின்தடையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியது.

பெரியார் திராவிடர் கழகம் தயாரித்துள்ள குறுவட்டை ஒளிபரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததையடுத்து அந்த குறுவட்டு 'மக்கள்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இதனை பொதுமக்கள் பார்ப்பதைத் தடுப்பதற்காக சென்னை இராயபுரம், புரசைவாக்கம், பெரம்பூர் உட்பட வட சென்னை முழுவதும் இன்று இரவு 9:00 மணிக்கு மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை நீடித்தது.

மாநில காவல்துறையால் தடை செய்யப்பட்டிருந்த இந்த குறுவட்டு இன்று 'மக்கள்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பு முடிந்ததும் மின்தடையும் நீங்கிவிட்டது.

காங்கிரஸ் சூரர்களும் வீசப்படாத செருப்புகளும்

யார் சொல்லியும் கேட்காத ராஜபட்சே தமிழக முதல்வர் கருணாநிதி இருந்த ஆறு மணி நேர உண்ணாவிரத்தைப் பார்த்து பயந்து போய் போரை நிறுத்திவிட்டார். பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபரிடம் பேசி போரை நிறுத்திவிட்டார். அங்கு பூரண அமைதி நிலவுகிறது. அல்லது பெரு மழைக்குப் பிந்தைய தூறல்தான் அங்கே என்று தொடர்ந்து பேசி வருகிறார்கள் திமுகவினரும் காங்கிரஸ்காரர்களும். மழை என்றால் மரணத்தின் எண்ணிக்கை எவ்வளவு, தூறல் என்றால் இனப்படுகொலையின் எண்ணிக்கை எவ்வளவு என்று நாம்தான் தினம்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அன்றாடம் விழுகிற பிணங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

கொல்லப்படுபவர்கள் எல்லாம் புலிகள் பொது மக்கள் அல்ல என்றுதான் காங்கிரஸ்காரன் சொல்கிறான். ஆனால் இந்தியாவின் துணையோடு ஈழத்து மக்களை மட்டுமல்ல புலிகளைக் கொன்றாலும் அது இனப்படுகொலையே என்பதுதான் தமிழக மக்களின் உணர்வு. நாம் அதைத்தான் பேசுகிறோம். மக்களின் கொலைகளுக்காக புலிகளை அழித்தொழிப்பதற்காக, இன்றைக்கு தமிழகத்தில் போர் நடக்கிறது. அங்கே ராஜபட்சே தமிழ் மக்களைக் கொல்கிறான் என்று சொன்னாலே அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. அப்படித்தான் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பேசுகிறார்கள். அதனால் அவர்கள் மீது இத்தனை ஒடுக்குமுறை. நள்ளிரவில் புகுந்து பெண்களை ஆபாச வசவுகளால் திட்டி அடித்து உதைத்து இழுத்துச் சென்று சிறையில் தள்ளியிருக்கிறார் கருணாநிதி. இந்தியாவின் வேறு எந்த மாநில முதல்வரும் செய்யாத ஒரே சாதனை தள்ளுவண்டியில் வந்ததுதான். இவர் தன் உடல் பலவீனத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார். தனக்கு வாக்களித்த மக்களை செயல்படா முதல்வராக இருந்து மோசடி செய்கிறார். ஆனால் கொடிய அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டு தங்களின் அரசியல் எதிர்ப்பாளர்களை ஈவிரக்கமற்ற முறையில் சட்டத்திற்குப் புறம்பாக தண்டித்து வரும் கருணாநிதியின் மீது சிறிதளவேனும் கருணை காட்ட இடமில்லாமல் போய் விட்டது.

ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் திமுக மீது தோன்றியுள்ள வெறுப்பை தேர்தலில் அறுவடை செய்யப் போகும் அதிமுகவோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையோ இந்தக் கைதுகளுக்காகவும் வழக்கம் போல் குரல் கொடுக்கவில்லை. சீமான் கைது செய்யப்பட்டபோது இவர்கள் என்ன விதமான மௌனம் காத்தார்களோ அதே மௌனத்தை இப்போதும் காக்கிறார்கள். பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் இன்றைய போராட்டத்தில் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஈழத்துக்காக நாங்கள் போராட மாட்டோம். ஆனால் ஓட்டு மட்டும் பொறுக்கி பதவி அரசியலுக்கு வருவோம் என்று நினைக்கிற ஜெயலலிதாவையும் கண்டு நாளை ஏமாறப் போவது தமிழினம். அதுதான் கருணாநியின் பலம்.

இன்றைக்கு சில நண்பர்கள் இலங்கைப் போரில் இந்திய காங்கிரஸ் கட்சிதான் ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது. அதில் மாநில திமுகவிற்கு ஒரு பங்கும் இல்லை என்பது போல பேசி வருகிறார்கள். இலங்கை இனப்படுகொலையில் மத்திய அரசின் பங்கையும் மாநில அரசின் செயல்படா தன்மையின் துரோகத்தையும் தோலுரிக்கும் பெரியார் திக தோழர்களுக்கு மட்டும் கடும் தண்டனை. விளைவு கொதிப்பு உயர்ந்து இன்று தமிழகம் முழுக்க காங்கிரஸ் திமுக வேட்பாளர்களுக்கு மக்களிடமே கடும் எதிர்ப்பு இருக்கிறது. பல இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஊருக்குள் நுழைய விடாமல் மக்கள் தடுக்க அவர்களுக்காக வக்காலத்து வாங்கச் சென்றது விடுதலைச் சிறுத்தைகள். திமுக கூட்டணியில் இன்று இருக்கும் ஒரே ஆறுதல் திருமாவளவன் மட்டும்தான். ஆனால் இயல்பான மக்கள் எதிர்ப்பு ஒரு பக்கம் என்றால் தங்களுக்கு எதிராக யாரும் தேர்தல் வேலை பார்க்கக் கூடாது யாரும் பிரச்சாரம் செய்யக் கூடாது என்கிற அடக்குமுறையின் உச்ச வடிவமாக இந்த தேர்தல் மாறியிருக்கிறது.

சிவகங்கையில் ப. சிதம்பரத்தை எதிர்த்து ஈழ ஆதரவாளர் ராஜீவ்காந்தி போட்டியிடுகிறார். சிதம்பரமும் அவரது வாரிசு கார்த்திக் சிதம்பரமும் அவரது அல்லக்கை அடியாட்களும் வேட்பாளர் ராஜீவ்காந்தியையும் அவருக்கு ஆதரவாக பணியாற்றும் நண்பர்களையும் அன்றாடம் துரத்தித் துரத்தி தாக்குகிறார்கள். தேர்தல் முடியும் வரை அவர்களை சிறையிலடைக்க முயற்ச்சிக்கிறார்கள். அதாவது எவனும் தங்களுக்கு எதிராக வேலை செய்யக் கூடாது பேசக் கூடாது என்றால் எதற்குத்தான் ஓட்டுப் பொறுக்க வேண்டும்? பேசாமல் காங்கிரஸ் வேட்பாளரெல்லாம் வெற்றி என்று அறிவித்து விட்டுப் போக வேண்டியதுதானே!

உண்மையில் இன்று தமிழர்களைப் பார்த்து ஒவ்வொரு காங்கிரஸ்காரனும் அஞ்சி நடுங்கும் சூழலுக்கு வந்திருக்கிறான். எப்படி என்றால் சோனியாகாந்தியின் வருகைக்காக சென்னை தீவுத் திடலில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டதல்லவா? அதில் சோனியா நிற்கும் மேடைக்கும் பார்வையாளர்கள் அமரும் தூரத்தையும் எப்படி அளவிட்டார்கள் தெரியுமா? பந்தல் அமைக்கும் தொழிலாளர்கள் சிலரை அழைத்து ஒவ்வொருவரையும் பல கோணங்களில் நிறுத்தி செருப்பை சோனியாகாந்தி, கருணாநிதி நிற்கும் இடத்தை நோக்கி வீச வைத்து அந்த தூரத்தை அளந்து அதன்படியே மேடை அமைக்கப்பட்டதாம்.

தங்கள் மீது செருப்பு வீசப்படும் என்று பயப்படுகிறவர்கள் அதற்கு தங்களை தகுதியுள்ளவர்களாக ஆக்கிக் கொள்ளாமல் இருந்து தொலைக்க வேண்டியதுதானே? ஆனால் அப்படி அல்ல. வயலார் ரவியும், குலாம் நபி ஆசாத்தும், வீரப்ப மொய்லியும் தமிழ் மக்களை கேணப்பயல்களாக நினைக்கிறார்கள். ஆனால் செருப்பை வீசி அளவை எடுத்தது மட்டும்தான் தமிழர்களுக்கு கிடைத்துள்ள தக்க மரியாதை. இதைத் தொடர்ந்து பேணுவதன் மூலமே தமிழகம் இந்தியாவின் ஏனைய சமூகங்களை விட தலை நிமிர்ந்து வாழ முடியும். காங்கிரஸ் கட்சிக்கு முடிவு கட்டுவோம். தோழர்கள் மீதான ஒடுக்குமுறைக்காக குரல் கொடுப்போம்.

- பொன்னிலா (judyponnila@gmail.com)

http://www.keetru.com/literature/essays/ponnila_9.php

Monday 11 May 2009

பிரபாகரனுக்கு கடைசிவரை விசுவாசமாக இருந்து செத்துப்போடா: சீமானிடம் தந்தை

மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிந்தது. திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பாக புதுச்சேரியில் பிரச்சார பொதுக்கூட்டம் மதியம் 1 மணிக்கு ஆரம்பித்து மாலை 5மணிக்கு முடிந்தது.


இப்பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய இயக்குநர் சீமான், ’’இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு 70நாட்கள் புதுச்சேரி சிறையில் இருந்தேன்.


அப்போது ஒரு நாணயம் போட்டு போன் பேசுவதற்கு அனுமதி இருப்பதால் என் அப்பாவுக்கு போன் போட்டேன். உன் அண்ணனுக்கு(பிரபாகரன்) கடைசிவரை விசுவாசமாக இருந்து செத்துப்போடா என்று சொல்லி என் இனமான தமிழ் உணர்வுக்கு மேலும் உரமிட்டார்’’ என்று பேசினார்.

திமுக,காங்கிரஸ்,மகிந்த கூட்டணி இணைந்து 2000 தமிழரை பலி வாங்கினார்கள்

இலங்கையில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற குண்டுவீச்சு தாக்குதலில் சுமார் 2000 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக அரசு மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதிகளில் பெருமளவு பொதுமக்களும் தங்கியுள்ளனர். அங்கு கடந்த இரு நாட்களாக இலங்கை ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், பொதுமக்களில் சுமார் 2000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கு தற்காலிகமாக செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் வி. சண்முகராஜா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

பதுங்குக்குழிகளில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அதே இடத்திலேயே எரிக்கப்பட்டதாகவும், காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே இத்தாக்குதலை 'ரத்தக்குளியல்' என்று குறிப்பிட்டுள்ள ஐநா, இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கை போர் குறித்து ஐநா பாதுகாப்புக் கவுன்சில் விவாதிக்க வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகம், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும, இலங்கைக்கு நிதியுதவி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் உள்ள ஜப்பான் இதற்கான முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

தனி ஈழம் அமைக்க ராணுவத்தை அனுப்ப வேண்டாம்: ஜெ.வுக்கு சீமான் வேண்டுகோள்

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மட்டும் நீக்குங்கள். அது ஒன்று போதும். அதை மட்டும் செய்துவிட்டு நீங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.


இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறி வருகிறார்.

இது குறித்து இயக்குநர் சீமான், புதுச்சேரி மாநிலத்தில் இன்று நடந்த பிரச்சாரம் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பில் நடந்த இப்பொதுக்கூட்டத்தில் பேசும் போது அவர், ‘’தமிழ் பெருமகளே...ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைக்க வேண்டாம்.


இந்திய ராணுவம்தான் முன்பு அமைதிப்படை என்கிற பேரில் என் இனமான தமிழ் மக்களை அழித்தது. என் சகோதரிகளை அவமானப்படுத்தியது. இப்போதும் இந்த ராணுவம்தான் என் இனமான தமிழ் மக்களை அழிக்கிறது.


அதனால் அந்த ராணுவத்தை அனுப்பி எங்களை கேவலப்படுத்த வேண்டாம். உங்களிடம் நாங்கள் வேண்டிக்கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான்.


விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மட்டும் நீக்குங்கள். அது ஒன்று போதும். அதை மட்டும் செய்துவிட்டு நீங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.


அதன்பிறகு உலகமெங்கிலும் இருந்தும் பிரபாகரன் படை திரளும்’’ என்று தெரிவித்தார்.

Sunday 10 May 2009

சசி அவர்களின் விரக்தி/தன்னம்பிக்கை இழப்பு

சசி அவர்களின் இந்த பதிவினை பார்க்கும் போது கேட்க தோன்றுவது இதுதான்

போதுமடா இந்த ஈழப் போராட்டம்

நீங்கள் சொல்லும் படி அன்று இந்தியா இருந்திருந்தால் நாமும் நம் இந்திய தலைமுறைகளும் இன்று ஒரு சுதந்திர நாடாக இருந்திருக்க முடியுமா. வெள்ளை காரன் நம்மை அழித்தே கொன்றிருப்பான்.

எந்த மக்களும் யாருக்கும் அடிமையாக வாழ நினைப்பதில்லை, முதலில் ஆரம்பித்த்து அஹிம்சை போராட்டங்களே அப்போது ஏன் 3000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். வேறு வழியின்றி ஆயுத போராட்டத்துக்கு தள்ளப்பட்டவர்கள் தமிழ் மக்கள். அவர்களால் உருவாக்கப்பட்டது விடுதலை புலிகள். அவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல.
யாருக்காக போராடுகிறார்கள் அதை எண்ணி பாருங்கள்.


தோல்வி வரும் போதும் தோள் கொடுக்காத நண்பனாக இருப்பதை என்ன சொல்வது, 80% நிலம் இருந்தால்தான் கூட இருப்பேன் என்பது உங்களின் சுயநலத்தினை காட்டுகிறது.

தமிழ் மக்கள் அழிப்பது இந்த போர் நடந்தாலும்/நடக்கா விட்டாலும் தொடர்ந்தது/தொடரத்தான் போகிறது. அதை காப்பாற்ற ஒரே வழி தனி ஈழம். அதற்கு பாடுபடுங்கள்.

It is always good to find the solution for root cause, There may be many obstacles when we try to achieve our goal. Sort out those rather than telling finish off your goal.

Thursday 7 May 2009

அன்னை’க்குப் பாடம் புகட்ட ‘அம்மா’வுக்கு ஓட்டு...!? தீசுமாசு டி செல்வா

வழக்கறிஞர்களையும், பொதுமக்களையும் கொடூரமாகத் தாக்கும் தமிழக அரசின் சீருடைக் குண்டர்கள்,

விசைத்தறி, பட்டறை தொழில்களைக் காலி செய்து பொழப்பக் கெடுத்த ஆர்க்காட்டாரின் மின்வெட்டு,
அம்பானி சகோதரர்களின் சம்பாதனை குறைந்து விடக்கூடாதென நிறுத்தி வைக்கப்பட்ட சிதம்பரத்தின் பெட்ரோல் விலை குறைப்பு,
சிறு வியாபாரிகளை தள்ளுவண்டிக்காரர்களாகவும், தள்ளுவண்டிகாரர்களை நடைபாதை வியாபாரிகளாகவும் தகுதி இறக்கம் செய்து விட்ட ரிலையன்ஸ் ஃபிரெஷ்,
விவசாயிகளை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலம்...
மன்மோகன், கருணாநிதி கும்பலை விரட்டியடிக்க இவை போதுமானவைதாம். கெடுவாய்ப்பாக இவையெல்லாம் இத்தேர்தலில் பின்னுக்குப் போய், கடைசியில் காணாமலே போய்விட்டன.
‘ சமூக விழிப்புணர்வு’ கடந்த சில ஆண்டுகளில் அது குறித்த பல சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டிருப்பதால் தற்போதைய தேர்தலில் முக்கியப் பிரச்சனையாக மாறிவிட்ட ஈழத் தமிழர் பிரச்சனையை ஒரு சிறு விவாதமாக கேள்வி பதில் வடிவில் இங்கே தருகிறோம்.

Jayalalitha and left parties 'அன்னைக்குப் பாடம் புகட்ட ’அம்மா’வுக்கு ஓட்டுப் போடச் சொல்கிறார்களே....

தேர்தல் முடிஞ்ச பிறகு ’அம்மா நடத்தப் போகும் பாடத்தை கைகட்டி, வாய் பொத்திக் கேட்கச் செவியுள்ளவர்கள், துணிவுள்ளவர்கள் தாராளமாக அம்மாவுக்கு ஓட்டுப் போடலாம்.

பழசை மறந்தவர்கள் பாடம் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ள தா. பாண்டியன், வரதராஜன் போன்ற காம்ரேடுகளை அணுக வேண்டும். தற்சமயம் சீட்டுக்காகப் போயஸ் கார்டன் வாசலில் ராப்பகலாய் அவர்கள் படுத்துக் கிடப்பதால் கட்சி அலுவலகத்தில் சந்திக்க இயலாது. ஒரு வாரமோ பத்து நாளோ பொறுத்தபின் முயற்சிக்கவும்.

“கொலைக் குற்றவாளி பிரபாகரனைப் பிடித்து இந்தியா கொண்டு வரவேண்டும்” என ரெட்டைக்குழல் துப்பாக்கியாய் முழங்கிய தங்கபாலுவும், ஜெயலலிதாவும் ஏன் வேறு வேறு கூட்டணிகளாகப் பிரிந்து நிற்கிறார்கள்?

இந்துத்துவா, மதமாற்றத் தடைச்சட்டம், பார்ப்பனியத் திமிர் அனைத்திலும் ஒத்த கருத்தும், ஒரே செயல்பாடும் கொண்ட சங்கராச்சாரி ஜெயேந்திரனும், ஜெயலலிதாவும் எதிரெதிர் முகாம்களில்தானே உள்ளனர்! அஜெண்டாவில் என்ன பின்னடைவு ஏற்பட்டு விட்டது?எதிரெதிராக வெட்டுவதாலேயே அது வேறு, இது வேறென ஆகிவிடாது கத்திரிக்கோல்.

காங்கிரஸ் கூட்டணிக்குப் போன திருமாவளவன் தேர்தல் பிரச்சாரத்தில் எதை பேசுவார்?

இலங்கையின் இறையாண்மை குறித்து கண்ணீர் விடும் இந்தியா, சீனாவின் இறையாண்மை எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்பதற்காக தலாய் லாமாவுக்கு தினமும் கிடா வெட்டு விருந்து வைப்பதை ஆதாரங்களுடன் மேடைதோறும் அம்பலப்படுத்துவார். அய்ரோப்பிய ஓடுகாலி என்.ஆர்.ஐ.களின் மயிரைப் பிடுங்குற டர்பன் மேட்டருக்காக, எந்திரிக்க முடியாத நிலையிலும் சர்கோசியைப் பார்த்து பிராது கொடுத்த மன்மோகனை சந்திக்கிழுத்து வசை பாடுவார்.

காங்கிரசுக்காரன் கடுப்பாகி, கட்டையைத் தூக்கிக் குறுக்கே போட்டால் அப்படியே குப்புறப்படுத்துக் கொள்வார். சிறுத்தை பயந்து புதருக்குள்ளே ஓடி பதுங்கி விட்டது என நாம் அவதூறு சொல்லக்கூடாது. 67 இல் காமராசர் சொன்ன ’படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் திட்டமாகவும் இருக்கக்கூடும்.

பாட்டாளி மக்கள் கட்சி அணி மாறியது எதற்காக?

சத்தியமா ஈழத் தமிழர் பிரச்சனைக்காகத்தான். தட்டிக் கேட்காத மன்மோகன், தட்டிக் கொடுக்கும் பிரணாப், கள்ளத்தனமாக வழிநடத்தும் சோனியா, வாய்க்கொழுப்பெடுத்து திரியும் இளங்கோவன், சிதம்பரம்... கும்பலை எதிர்த்து அல்ல; பதவியைப் பறித்துவிடக்கூடாதென நாற்காலிக்குப் பின்னே பம்மிக் கொண்டிருக்கிறாரே... கருணாநிதி! அவரை எதிர்த்துதான் அணி மாறியிருக்கிறது பா.ம.க.

அதாவது, புருசன் அடிச்சது தப்பில்லை; கொழுந்தன் சிரிச்சதுதான் பிரச்சனையாம்! ஈழப் பிரச்சனையில் அய்யா எடுத்திருக்கும் நிலைப்பாட்டின் லட்சணம் இப்படித்தான். எல்லோரும் அம்மணமாக ஓடிக் கொண்டிருக்கும் பந்தயத்தில் கருணாநிதியை மட்டும் ஜட்டி போட்டுக்கொண்டு ஓடச் சொல்கிறார் தமிழ் குடிதாங்கி மருத்துவரய்யா.

‘சேலை கட்டிய முசோலினி சோனியா’ என்பது இறையாண்மைக்கு எப்படி எதிராகும்?

கற்பு, ஒழுக்கம் இவைகளை பெண்களின் சேலைக்குள் ஒளித்து வைத்திருப்பதுதான் நம்ம ’கலாச்சாரமே! தேசத்தை ஒரு பெண்ணாக உருவகிப்பதால் இறையாண்மையும் அங்குதான் இருக்க வேண்டும். அந்த ‘நம்பிக்கையால்’தான் பாவாடை நாடாவை அவிழ்த்து உள்ளே பாரத மாதாவைத் தேடினார் நம் ‘தமிழினத் தலைவர்’. இன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே போனவர்களில் ஒருவர் ஒரு காலத்தில் அத்தலைவரின் சீடகோடியாக இருந்தவரல்லவா! சகவாச தோஷத்தால் இந்திய இறையாண்மையை சோனியாவின் சேலைக்குள் தேடிவிட்டார்கள்...

கறுப்பைக் கரைத்து காவியாக்கினார் அம்மா. கதராக்கிக் கொண்டிருக்கிறார் கலைஞர்.

தேர்தல் நம்ம உள்ளூர் பிரச்சனை. அதைக் கணக்கில் கொண்டால் இலவச கலர் டி.வியும், ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியும் கொடுத்த கலைஞருக்கு ஏன் ஓட்டுப் போடக்கூடாது?

தாராளமாகப் போடலாம். எண்சாண் உடம்புக்கும் பிரதானம் சிரசு அல்ல; வயிறுதான் என்பதை ஒத்துக்கொண்டால்!

செருப்பாலடிச்சாலும் வாய்க்கு ருசியா கறியும் சோறும் ஆக்கிப் போட்டாரே ஆண்டை...! அடிமையா தொடர்வதில் என்ன தப்பு எனக் கேள்வி எழுப்பும் பண்ணையடிமைகளின் விசுவாசத்தை ஐந்தாண்டுகளுக்கொருமுறை நிறுத்துப் பார்க்கக் கொடுக்கப்படும் வாய்ப்புதான் தேர்தலென்றால் இது மிகச் சரியே!

தமிழீழ ஆதரவாளர்களை கள்ளத் தோணியில் போய் போர் செய்யச் சொல்கிறாரே முதல்வர்?

இவர் பேச்சை நம்பி கள்ளத் தோணியில் ஏறி படையெடுத்துப் போய் பாளையம் இறங்கும் நம்ம ஆட்கள் அங்கே ராஜபக்சேவின் சிங்கள இராணுவத்தை எதிர்கொண்டால் பிரச்சனையில்லை. ’அன்னை திருட்டுத்தனமாக அனுப்பி வைத்திருக்கும் இந்தியக் கூலிப் படையோடு மோத நேர்ந்தால்...!

சகோதர யுத்தம் அல்லது பங்காளி யுத்தம் வந்து விடுமே! தமிழினத் தலைவருக்கு அது அலர்ஜி ஆச்சுதே!

கடவுளோடும், மக்களோடும்தான் கூட்டணி வைத்திருக்கிறாராமே விஜயகாந்த்?

கடவுளோடு கூட்டணி வைக்க சிதம்பரம் நடராசன் கோயிலுக்குப் போயிருந்தால் நேரடியாக கடவுளுக்கும் கறுப்பு எம்.ஜி.ஆருக்கும் ஒரு கனெக்ஷன் போட்டு காரியத்தைக் கனகச்சிதமாய் முடிச்சுக் கொடுத்திருப்பார்கள் தீட்சிதர்கள். டெல்லிக்குப்போய் காங்கிரசுக்காரன் காலில் ஏன் விழுந்து எழுந்தார்?

Karunanidhi and sonia gandhi சிதம்பரம் போனால் தட்சணை கொடுக்கணும், டெல்லியில் வாங்கலாம் என்பதால் இருக்குமோ!

தமிழ்ப் புத்தாண்டுக்குள் ஈழத் தமிழர்களின் கதையை முடித்துவிட ‘அன்னை’ உத்தரவிட்டிருக்கிறாராமே...?

‘மந்திரி குமாரி என்றொரு படம். கட்டிய மனையாளை மலையுச்சியில் தள்ளிக் கொலை செய்ய’வாராய் நீ வாராய் என பாடியபடியே கூட்டிச் செல்வான் கணவன் என்ற உறவு கொண்ட காதகன் ஒருவன். எதிர்பாராத திருப்பம் அங்கே. கொலைகாரனே கொலையாகிப் போவான்.

பதவிக்காலம் முழுக்க கடிதங்கள் வரைந்தே பிரச்சனைகளை தீர்த்துக் கட்டும் கலைஞர் இந்த விசயத்தில் மட்டும் தனது வழியை மாற்றி, ஒரு காலத்தில் தான் வசனம் எழுதிய மந்திரி குமாரி படப்பெட்டியை பார்சல் செய்து டெல்லிக்கு அனுப்பி வைக்கலாம். வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. மகாத்மா காந்தியின் வாழ்க்கையை திசை திருப்பியதாம் அரிச்சந்திரா நாடகம். சோனியா காந்தியின் பாதையை ஏன் மாற்றாது மந்திரி குமாரி?

“போர் என்றால் அப்பாவி மக்கள் மேலும் குண்டுகள் விழத்தான் செய்யும்” என ராஜபக்சேவின் கொலைவெறிக்குப் பரணி பாடிய ’அம்மா இன்று ஈழ ஆதரவுப் படைக்கு தளபதியாகப் பொறுப்பேற்றிருப்பது காலம் செய்த கோலமா?

ஈராக்கிலும், ஆப்கானிலும் மிகப்பெரும் மனித உரிமை மீறலை நிகழ்த்தும் அமெரிக்கச் சண்டியரை ஈழப் பிரச்சனைக்குப் பஞ்சாயத்து பண்ண வெத்தல பாக்கு வச்சு அழைக்கிறவர்கள் ’அம்மா தலைமையின் கீழ் அணி திரள்வதில் கேவலம் ஒன்றுமில்லை.

அதே வேளையில் ’ஒரு மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும் என ஒற்றை வரியில் ஐந்தாயிரம் சீக்கியர்களின் படுகொலையை நியாயப்படுத்தி திமிர் கக்கிய ஒருவரின் கோரச் சாவுக்காக ஒரு இனத்தையே காவு வாங்கத் துடிக்கும் போக்கிரிக் கும்பலுக்கும், இந்தத் தள்ளாத வயதிலும் அவர்களைத் தோள்மேல் தூக்கிச் சுமப்பவருக்கும், ‘அம்மா’ ஏற்று நடிக்கும் புதிய பாத்திரத்தை விமர்சிக்கும் யோக்கியதை இல்லை.

'காங்கிரசைத் தோற்கடிப்போம்' வசனம் ’ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடுவோம்' என்பதைத்தானே மறைமுகமாகச் சொல்கிறது?
மறைமுகமாக அல்ல, நேரடியாகவே அதைச் சொல்கிறது. எதிரிகளும், துரோகிகளும் தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக, ஒரே அணியில் கலந்து விட்டதால் இப்படிதான் சொல்ல முடியும். ஏனெனில் இரு அணிகளிலும் இருக்கிறார்கள் பிள்ளையானும், கருணாவும்.

துரோகிகளாக இருந்தாலும் ’நம்மாளு எனும் இன உணர்வுடன் நெருங்கலாம் என்றால் அங்கே ஒரு ராஜபக்சேவும் இருக்கிறார். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இன்று சிக்கித் தவிப்பவர்கள் ஈழ மக்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்களும்தான். ‘விடுதலையை வென்றெடுக்க தொடர்ந்து ஏகாதிபத்தியங்களிடம் மண்டியிட்டும், ஓட்டுச் சீட்டையே ஆகச் சிறந்த ஆயுதமாகவும் முன்மொழிபவர்களுக்கு இந்தச் சிக்கல் கண்டிப்பாக வந்தே தீரும்.

கூட்டணியில் வைகோவுக்கு மட்டும் ஏனிந்த இழுத்தடிப்பு?

எடுக்கிறது பிச்சை; அதுல மொறப்பென்ன வேண்டிக் கெடக்கு? ‘கடைசியா வந்தவனுக்கெல்லாம் சுடுசோறு, எங்களுக்கு வெறும் பழையதுதானா?’ன்னு அழுது அடம்பிடிக்காம, நல்ல பிள்ளையா அம்மா போடுறத வாங்கிக்கனும். புது மாப்பிள்ளை கணக்கா வந்தமா சீரு செனத்திய வாங்கிட்டு நடையை கட்டினோமான்னு இருக்கனும், நம்ம ராமராசு அய்யா மாதிரி அத வுட்டுப்புட்டு போன தீபாவளிக்கு சீராட வந்த மருமகப்புள்ள அடுத்த தீவாளி வரைக்கும் அங்கேயே டேரா போட்டுக் கெடந்தா எந்த மாமியாதான் மதிப்பா?

Wednesday 6 May 2009

மீண்டும் கருணாநிதி பொய்பிரச்சாரம், சோனியா தமிழகம் வந்தார்

06-05-2009 அன்று திட்டமிட்டபடி சோனியா காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தேர்தல் பொய்ப் பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்து கருணாநிதியுடன் சந்திப்பொன்றை நடத்தியதாக தி மு க வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருணாநிதி அவர்களின் உண்ணா நோன்புக்குப் பிறகு ஈழத்தில் சிங்கள ராஜபக்ச அரசு செய்த யுத்த நிறுத்தம் அமுலில் இருப்பதாலும் அங்கு தமிழ் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதாலும் சோனியா - கருணாநிதி அவர்களின் இன்றைய சந்திப்பு மிகவும் நெருக்கமாக இருந்ததாக சன் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு தெரியப்படுத்தியது.

அதுமட்டுமன்றி சோனியா அன்னை தீவுத்திடலில் பிரச்சார மேடையில் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அவரை மேலும் குசிப்படுத்த குஸ்பு அவர்களை நடுவராகக் கொண்ட மானாட மயிலாட நிகழ்ச்சி போன்று கலாநிதி மாறனை நடுவராகக் கொண்டு ஜெயா ஆட.. ராமதாஸ் ஆட நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் அதில் மெய் மறந்து சோனியா அன்னையும் சேலை கழன்று விழுவது கூடத் தெரியாமல் அரசியல் குத்தாட்டம் ஆடியதாகவும் கலைஞர் தொலைகாட்சியின் நேரடி ஒளிபரப்பு தெரியப்படுத்தியது.

ஆனால் சர்வதேச செய்தி ஊடகங்களோ சோனியா அம்மையார் இன்று தமிழகத்துக்கு செய்ய இருந்த விஜயத்தை தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போட்டு விட்டது உண்மைதான் என்று தெரிவிக்கின்றன.

ஓஓ.. ஈழத்தில் தமிழன் சாகச் சாக.. யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கிறது என்று பொய் பிரச்சாரம் செய்தது போல.. கலைஞர் குடும்பம்.. இது விடயமாகவும் கதையளந்திட்டாங்க போல.. பழக்க தோசத்தில...!

தி.மு.க, சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் வெளியிட்ட தவறான செய்திகளை இங்கு இட்டதற்கு வருந்துகின்றோம். எப்படி சோனியாவின் வரவு இன்று தமிழகத்தில் நிகழவில்லையோ அப்படியே ஈழத்திலும் இன்னும் போர் ஓயவும் இல்லை கனக ரக ஆயுதங்களின் விமானக் குண்டு வீச்சுக்களின் பாவனையும் ஓயவில்லை.

ஈழத்தில் வன்னியில் 05-05-2009 அன்றும் விமானங்கள் மூலமும் பல்குழல் வெடிகணை செலுத்திகள் மூலமும் எரிகுண்டுகள் வீசி சிங்கள இராணுவம் நடத்திய தாக்குதலில் பல தமிழ் மக்கள் எரிந்து உடல்கருகி மாண்டுள்ளனர். ஆனால் தி.மு.க தலைவரோ ஈழத்தில் போர் நிறுத்தம் அமுலில் உள்ளதாக வழமை போன்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வருண் என்னும் தெருப்பொறுக்கி முட்டாள்

ஒரு கேணயன் பெரிய குடுமி வைச்சிகிட்டு தமிழனை கேள்வி கேட்கறான். இது என்றாவது தமிழன் படுற நிலைமையை பத்தி பேசி இருக்குதா. டேய் நீ எல்லாம் தமிழ் எழுதறது தமிழுக்கு பாவம்டா. உங்களை எல்லாம் அப்படியே கைபர் வழியா திருப்பி அனுப்பாமல் இன்னும் இங்கேயே வச்சிகிட்டு இருக்கோம்ல எங்களை சொல்லனும்டா வெண்ணை பயலே.

நாதாரி நாயே நீ ஹம்சாட்ட வாங்கறா காசுக்கு நல்லாவே குழைக்கற. ஆனால் இந்த தமிழின பாவம் உன்னை சும்மா விடாதுடா.

நீ தமிழ் பால் குடிச்சு வளர்ந்திருந்தால் உனக்கு தெரியும்டா தமிழினம் என்றால் என்னவென்று யார் தமிழன் என்று. தமிழ் நாட்டில் இருக்கும் பசு மாட்டு பாலையாவது குடி தமிழின உணர்வு வருகிறதா பார்க்கலாம்.

Tuesday 5 May 2009

ஈழ சி.டி தடைசெய்யப்பட்டது ஏன், கருணாநிதிக்கு கோர்ட் கேள்வி

மீண்டும் ஒரு முறை கருணாநிதி கோர்ட்டில் அவமானப்பட போகிறார்.

இலங்கை போரில் பாதிக்கப்பட்டுவரும் அப்பாவித்தமிழர்களின் அவலம் குறித்த சி.டி.க்களை விநியோகம் செய்வது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இலங்கை பிரச்னையை மையமாக வைத்தே அரசியல் கட்சிகள் வாக்குகள் சேகரித்து வருகின்றன. இந்நிலையில், இலங்கை தமிழர்களின் அவலம் குறித்த சி.டி.க்களை பொதுமக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கு அனுமதி அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக தமிழக அரசின் விளக்கத்தை ஒரு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Sunday 3 May 2009

தயாநிதி மாறனின் ஊழல் சாதனைகள்!

தயாநிதி மாறன் திமுகவின் திடீர் கதாநாயகனாய் அறிமுகமாகி அதே வேகத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகி, மத்தியத் தொலைத் தொடர்புத் துணை அமைச்சராகி, உயர உயரச் சென்றவர்.

அதீத வளர்ச்சியின் ஓர் அங்கமாக திமுகவுக்குள் குடும்ப சண்டை. கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்? என்று தினகரன் ஏட்டின் கருத்துக் கணிப்பு. அழகிரிக்கு 2 சதவீத ஆதரவு என முடிவு கூற, சிலப்பதிகாரத்தின் கதையில் எரிந்த மதுரை, அதிகாரப் போட்டியால் நிஜமாய் எரிந்தது. உயிர்கள் ப­லியாயின.

அழகிரியின் அராஜகங்கள் சன் டி.வி.யில் மெகா தொடர்களை மிஞ்சி ஒளிபரப்பாயின. கலைஞரின் சட்ட மன்றப் பொன்விழாவில் அழகிரி வளைய வந்தார். தயாநிதி மாறன் வரவே இல்லை. தாத்தா தந்த பதவியை வைத்து தொழிலதிபர் டாட்டாவையே மிரட்டினார் தயாநிதி என்று செய்திகள் வெளிவந்தன. பின்னாளில் அவர் தாத்தாவையும் (கலைஞரையும்) மிரட்டினார்.

சன் டி.வி., ஜெயல­லிதாவின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் ஜெயா டி.வி.யையும் மிஞ்சியது. இதனைத் தொடர்ந்து சன் டி.வி.க்கு எதிராக கலைஞர் டி.வி.யும், சன் நியூஸ் டி.வி.க்கு எதிராக கலைஞர் செய்திகள் டி.வி.யும் உதயமானது. தொடர்ந்து சிரிப்பொ­லி தொடங்கப்பட, அதற்குப் போட்டியாக ஆதித்யா தொடங்கப்பட்டது.

மாறன் குடும்பமும், கலைஞர் குடும்பமும் இனி சேருமா? என்ற ஐயம் எழுந்த வேளையில் அதிமுகவில் சேரப் போகிறார் தயாநிதி மாறன் என்றும் பத்திரிகைச் செய்திகள் வெளியாயின.
பிறகு எப்படி ஒன்று சேர்ந்தார்கள். கலைஞரின் மருமகனும், மாறன் சகோதரர்களின் சித்தப்பாவுமான செல்வம்தான் இதற்கு முயற்சி எடுத்தார் என்று கூறப்பட்டது. உண்மையில் குடும்பத்தை சேர்த்து வைத்தது 'செல்வம்'தான்.

'இதயம் இனித்தது, கண்கள் பனித்தன' என்றார் கலைஞர். அதற்கு சில வாரங்களுக்கு முன்னர் தயாநிதி மாறனின் இடத்தை நிரப்பிய மத்திய அமைச்சர் பெரம்பலூர் ராஜா மீது 'மூன்றாம் தலைமுறை அலைவரிசை (3ஏ நல்ங்ஸ்ரீற்ழ்ன்ம்) ஊழல்' என்ற குற்றச்சாட்டை சன் டி.வி. குழுமம் முன்வைத்தது. அதில் 7 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்றும் ஊடகங்கள் அலறின. ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்பது ஊழ­ல் தற்போதைய உச்சக்கட்ட எல்லை.

தயாநிதி மாறன் தரப்பி­ருந்து '3ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழ­ன் ஆதாரங்கள் அன்றாடம் ஒவ்வொரு படலமாய் வெளிவர, ஒற்றுமையின் அவசியத்தை கலைஞர், அழகிரி அன்னகோ உணர்ந் தது. அதன்பிறகுதான் கலைஞரின் இதயம் இனித்தது, கண்கள் பனித்தன. இதனைத் தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழலை மேற்கொண்டு அம்பலப்படுத்தாமல் சன் டி.வி. அமுக்கியது.

தற்போதைய நீலகிரி (தனி) தொகுதி வேட்பாளர் அ. ராசா, ஒரு லட்சம் கோடி ஊழல் செய்ததை அம்பலப்படுத் திய தயாநிதி மாறன், ஊழ­ல் தார்மீக எதிரியா? இல்லை என்கின்ற தயாநிதியின் தடாலடி ஊழல்கள்.

தன் இடத்தில் அமர்ந்து, ஊழ­ல் தன்னை மிஞ்சிவிட்டாரே ராசா என்பதுதான் தயாநிதியின் ஆதங்கம்.

வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி ரிலையன்ஸ் நிறுவனம் மோசடி செய்தது. ஊழலைக் கையும் களவுமாகக் கண்டுபிடித்தது சி.பி.ஐ. ரிலையன்ஸ் செய்த ஊழ­ன் மதிப்பு 4,500 கோடி ரூபாய் அரசாங்கத் திற்கு இது பெரிய இழப்பு. 500 கோடி ரூபாயை ரிலையன்ஸ் அபராதமாகக் கட்டி தப்பித்துவிட்டது.

ரிலையன்சின் தப்புகளை மறைத்து தப்பவைத்தவர் தயாள(?) குணம் படைத்தவர் தயாநிதி மாறன். ரிலையன்சின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பலரும் கோரியபோது, தேவையில்லை என்று அம்பானிகள் மீது அன்பு மழைப் பொழிந்தவரும் தயாநிதி மாறன்தான்.
அண்மையில் தயாநிதி மாறனின் ஊழல்கள் குறித்து ஜெயல­லிதா வெளி யிட்ட அறிக்கையும் பேச்சும் நாட்டையே உலுக்கின.

தயாநிதி மாறன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி 323 இணைப்புகளைப் பெற்றுள்ளார். அவரது வீட்டிலேயே ஒரு எக்சேஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது. இவை அதிநவீன வசதிகளைக் கொண்டது. உலகின் எந்த மூலைக்கும் மின்னல் வேகத்தில் அனுப்புவதற்காக 'பேசிக் ரேட் அக்ஸஸ்' மற்றும் 'பிரைமரி ரேட் அக்ஸஸ்' ஆகிய வசதிகள் அவ்விணைப்புகளில் இருந்தன. அமைச்சர் என்ற முறையில் அமைக்கப் பட்ட இணைப்பகத்தை அதிகார வரம்பு மீறல் செய்து, சன் டி.வி.யோடு ரகசிய மாக இணைத்து, அரசுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை தயாநிதி மாறன் ஏற்படுத்தி யதை சி.பி.ஐ. கண்டுபிடித்ததாக ஜெயல­லிதா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்