Wednesday 29 April 2009

சேற்றை வாரி இரைக்கும் தினமலர் வாங்காதிர்கள்

முதலில் தினமலர் வாங்குவதை நிறுத்துவோம். எப்படி அஜித், அர்ஜுன் பொருளாதரத்தால் அடிக்கப்பட்ட போது, திருந்தினார்களோ(திருத்தப்பட்டார்களோ) அதே போல் தமிழர்களாகிய நாம் அதே வழியை கடைபிடிப்போம் இந்த தினமலரின் சேற்றிரைப்புக்கு எதிராக.

அதுவும் டைரக்டர்கள் போராட்டத்திற்கு பிறகு கன்னா பின்னான்னு சேற்றிரைப்பு வேலையில் இறங்கியுள்ளது. தமிழனுக்கு எதிரான அனைத்து சதிகளையும் முடுக்கிவிட்டு ஈழத்தமிழர் போராட்டத்தை கொச்சை படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது.

தமிழ் மக்களே இவர்கள் நாம் என்ன சொன்னாலும் கேட்கப்போவதில்லை. அஹிம்சை வழியில் எப்படி ஆங்கிலேயர்கள் காலத்தில் அவர்களின் பொருட்களை எப்படி புறக்கணித்தோமோ அதே போல் இப்போது தமிழனுக்கு எதிராக கட்டவிழ்த்து பட்டுள்ள இந்த வன்முறையை அடக்க அஹிம்சை முறையில் தினமலர் வாங்குவதை புறக்கணிப்போம்.

இதுவே நமது முதல் அஹிம்சை வழி புரட்சியாகட்டும். ஈழத்தமிழர்களுக்கும் , தமிழர்களுக்கு செய்யும் பெரிய சேவை இதுவே. முதலில் களையெடுப்போம் இந்த குள்ள நரிகளை.

உங்கள் நண்பர்கள், உற்றார், உறவினர் யார், யாரிடம் உங்களால் இயன்ற அளவு எடுத்து கூறுங்கள். நீங்கள் நிறுத்தும் ஒவ்வொரு பத்திரிக்கையும் அங்கே 1000 தமிழர்களை காப்பாற்ற போகிறது என்ற மகிழ்ச்சியுடன் உங்கள் கணக்கை தொடங்குங்கள்.

எதற்கு தினமலர் என்று கேட்கலாம், ஒரே நேரத்தில் அனைத்து எதிரிகளையும் சந்திப்பதை விட முதலில் தினமலர், இவனை பார்த்து அடுத்தவன் இனி தமிழனை இழிவாக பேசமாட்டான்.

No comments:

Post a Comment