Friday 22 May 2009

பிரபாகரன் மனைவி, மகள் மரணம் அடையவில்லை; பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம்: இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கை தடுமாறுகிறது, இதன் முகத்திரை கிழிகிறது, இதற்கு கொடி பிடித்த அம்பிமார்கள், துரோகிகள், சிங்கள காடைகளும் மிகுந்த சோகத்தில் மூழ்குகின்றனர், விரைவிலே இவர்களின் அண்ணன் மகிந்த, கோத்த போர்குற்றவாளி கூண்டில் ஏற அமெரிக்கா அனைத்து ஆரம்ப வேலைகளையும் நிறைவு செய்துள்ளது..

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, 2-வது மகன் பாலச்சந்திரன் ஆகிய மூவரும் இங்கிலாந்தில் பாதுகாப்புடன் உள்ளனர். ஆனால் இவர்கள் மூவரும் போரில் கொல்லப்பட்டு விட்டதாக அதிகார பூர்வமற்ற ஒரு தகவல் கடந்த புதன்கிழமை வெளியானது.

பிரபாகரன் உடல் கிடந்த நந்திக்கடல் கழிமுக பகுதியில் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகிய 3 பேரின் உடல்களை மீட்டதாக இராணுவத்தின் 56-வது படையணி கூறியது.

பிரபாகரன் உடல் கிடந்த இடத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவில் அந்த உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது சிங்கள இராணுவத்தின் ஏமாற்று வேலை என்று உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

பிரபாகரன் உடல் கிடந்ததாக கூறப்படும் நந்திக்கடல் பகுதியில் பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் திரண்டிருந்தனர். அவர்களுக்கு எப்படி மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் உடல்கள் அன்றைய தினம் கிடைக்காமல் போனது என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து பிரபாகரன் மனைவி குறித்து வெளியிடப்பட்ட தகவல் தவறானது என்று சிங்கள இராணுவம் ஒத்துக்கொண்டது.

இது தொடர்பாக சிங்கள இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரா கொழும்பில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரன் மரணம் அடைந்து விட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர்களது உடல்கள் எதையும் இராணுவம் மீட்கவில்லை.

இராணுவத்திடம் 4 ஆயிரம் விடுதலைப்புலிகள் சரண் அடைந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

நடேசன், புலித்தேவன் இருவரும் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த போது சுட்டுக் கொல்லப்படவில்லை. இராணுவத்துடன் சண்டையிட்ட அவர்கள் இறந்தனர்.

கடைசி நாள் போரில் இராணுவமும் பலத்த உயிரிழப்பை சந்தித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். எத்தனை ஆயிரம் சிங்கள வீரர்கள் பலியானார்கள் என்று கேட்டதற்கு உதய நாணயகாரா பதில் அளிக்க மறுத்து விட்டார்.

சிங்கள இராணுவத்துக்கு 40 ஆயிரம் வீரர்கள் தேவை என்று அரசு சார்பில் கடந்த 2 நாட்களாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதை வைத்து பார்க்கும் போது, முல்லைத்தீவு சண்டையில் பல்லாயிரக்கணக்கில் வீரர்களை சிங்கள இராணுவம் இழந்திருக்கும் என்று கருதப்படுகிறது.



முல்லைத்தீவு நந்திக் கடல் பகுதியில் பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம்: சிங்கள இராணுவம் சொல்கிறது

இலங்கை முல்லைத்தீவில் உள்ள நந்திக் கடல் பகுதியில் நடந்த சண்டையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்று விட்டதாக இராணுவம் அறிவித்தது.

பிரபாகரன் உடலை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு துரோகம் செய்து, அமைச்சர் பதவி பெற்றுள்ள கருணாவை அழைத்து வந்து அடையாளம் காண வைத்தனர்.

கருணாவும் அந்த உடலை பார்த்து விட்டு இது பிரபாகரன் உடல்தான் என்றார்.

ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக விடுதலைப்புலிகள் உறுதியுடன் தகவல் வெளியிட்டனர். பிரபாகரன் எப்படி தப்பிச்சென்றார் என்ற முழு விபரமும் நேற்று வெளியானது. இதனால் பிரபாகரன் தொடர்பாக மர்மம் நீடிக்கிறது.

இந்த நிலையில் பிரபாகரன் உடலை எரித்து விட்டோம் என்று சிங்கள இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நந்திக் கடல் கழிமுகப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரபாகரன் உடலை இராணுவம் கைப்பற்றியது. அந்த உடம்பில் இருந்து பரிசோதனைக்காக இரத்தம் எடுத்துள்ளோம். இது பிரபாகரன் உடல்தான் என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இனி பிரபாகரன் உடல் தொடர்பாக எந்த டி.என்.ஏ. சோதனையும் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம். அவரது உடல் மீட்கப்பட்ட நந்திக்கடல் பகுதியிலேயே இந்த தகனம் புதன்கிழமை நடந்தது.

பிரபாகரன் உடலுடன் அவரது சகாக்களின் உடல்களும் முழுமையாக எரிக்கப்பட்டு விட்டது. ஆனால் பிரபாகரனும் அவரது சகாக்களும் தப்பிச் சென்று விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள்.

பிரபாகரன் உடலை எங்கள் டி.வி.குழுவினர் படம் பிடித்துள்ளனர். கருணாவும், தயா மாஸ்டரும் உறுதி செய்துள்ளனர். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

இவ்வாறு பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார்.

3 comments:

  1. உயிருடன் இருப்பின் மிக்க சந்தோசமே!!

    ReplyDelete
  2. மர்மங்களே தொடர்ந்து ஊடகங்களை நிரப்புகின்றன.

    மெளனமே இப்போ சிறந்த மொழி.

    சாந்தி

    ReplyDelete
  3. balachandran, duwaraka, mathivathani and charles were shot dead. This is the fact.

    pirapakaran was hacked to death. this is the fact.

    ReplyDelete