Monday 11 May 2009

பிரபாகரனுக்கு கடைசிவரை விசுவாசமாக இருந்து செத்துப்போடா: சீமானிடம் தந்தை

மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிந்தது. திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பாக புதுச்சேரியில் பிரச்சார பொதுக்கூட்டம் மதியம் 1 மணிக்கு ஆரம்பித்து மாலை 5மணிக்கு முடிந்தது.


இப்பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய இயக்குநர் சீமான், ’’இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு 70நாட்கள் புதுச்சேரி சிறையில் இருந்தேன்.


அப்போது ஒரு நாணயம் போட்டு போன் பேசுவதற்கு அனுமதி இருப்பதால் என் அப்பாவுக்கு போன் போட்டேன். உன் அண்ணனுக்கு(பிரபாகரன்) கடைசிவரை விசுவாசமாக இருந்து செத்துப்போடா என்று சொல்லி என் இனமான தமிழ் உணர்வுக்கு மேலும் உரமிட்டார்’’ என்று பேசினார்.

No comments:

Post a Comment