Tuesday 5 May 2009

ஈழ சி.டி தடைசெய்யப்பட்டது ஏன், கருணாநிதிக்கு கோர்ட் கேள்வி

மீண்டும் ஒரு முறை கருணாநிதி கோர்ட்டில் அவமானப்பட போகிறார்.

இலங்கை போரில் பாதிக்கப்பட்டுவரும் அப்பாவித்தமிழர்களின் அவலம் குறித்த சி.டி.க்களை விநியோகம் செய்வது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இலங்கை பிரச்னையை மையமாக வைத்தே அரசியல் கட்சிகள் வாக்குகள் சேகரித்து வருகின்றன. இந்நிலையில், இலங்கை தமிழர்களின் அவலம் குறித்த சி.டி.க்களை பொதுமக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கு அனுமதி அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக தமிழக அரசின் விளக்கத்தை ஒரு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

1 comment:

  1. கோர்ட்டும் வாக்குபதிவு முடிவுக்கு பிறகுதான் அனுமதி கொடுக்க முடிவு செய்துள்ளது.

    ReplyDelete