Monday 11 May 2009

தனி ஈழம் அமைக்க ராணுவத்தை அனுப்ப வேண்டாம்: ஜெ.வுக்கு சீமான் வேண்டுகோள்

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மட்டும் நீக்குங்கள். அது ஒன்று போதும். அதை மட்டும் செய்துவிட்டு நீங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.


இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறி வருகிறார்.

இது குறித்து இயக்குநர் சீமான், புதுச்சேரி மாநிலத்தில் இன்று நடந்த பிரச்சாரம் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பில் நடந்த இப்பொதுக்கூட்டத்தில் பேசும் போது அவர், ‘’தமிழ் பெருமகளே...ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைக்க வேண்டாம்.


இந்திய ராணுவம்தான் முன்பு அமைதிப்படை என்கிற பேரில் என் இனமான தமிழ் மக்களை அழித்தது. என் சகோதரிகளை அவமானப்படுத்தியது. இப்போதும் இந்த ராணுவம்தான் என் இனமான தமிழ் மக்களை அழிக்கிறது.


அதனால் அந்த ராணுவத்தை அனுப்பி எங்களை கேவலப்படுத்த வேண்டாம். உங்களிடம் நாங்கள் வேண்டிக்கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான்.


விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மட்டும் நீக்குங்கள். அது ஒன்று போதும். அதை மட்டும் செய்துவிட்டு நீங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.


அதன்பிறகு உலகமெங்கிலும் இருந்தும் பிரபாகரன் படை திரளும்’’ என்று தெரிவித்தார்.

3 comments: